Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை; ... இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; பாரம்பரியம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் முற்றுகை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருந்தமலையில் புதிய தேர் வெள்ளோட்டம் திருப்பணிகள் ஜரூர்
எழுத்தின் அளவு:
குருந்தமலையில் புதிய தேர் வெள்ளோட்டம் திருப்பணிகள் ஜரூர்

பதிவு செய்த நாள்

16 நவ
2023
04:11

மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, திருப்பணிகள் ஜரூராக நடைபெறுகின்றன.

காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பெரிய தேர், தேரோட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதை அடுத்து புதிதாக தேர் செய்ய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்தது. உபயதாரர்கள் உதவியுடன், இலுப்பை, தேக்கு ஆகிய இரண்டு வகை மரங்களால், தேர் செய்து முடிக்கப்பட்டது. பதினொன்னே முக்கால் அடி உயரம், பன்னிரண்டேகால் அடி அகலத்தில் தேர் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக, 148 சிற்ப சிலைகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று நிலை தேரில், கோவில் தல வரலாறு, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் குளித்து ஆலோசனைக் கூட்டம், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோயில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். தேர் உபயதாரர்கள், கிட்டாம்பாளையம், புங்கம்பாளையம், தேக்கம்பட்டி, செல்லப்பனூர், அரசப்பனூர், ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, மிராசுதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வருகிற, 23ம் தேதி புதிதாக செய்த தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்விழாவில் மூன்று கால யாக வேள்வி பூஜைகளும், அதை தொடர்ந்து, ஸ்தபதி பூஜையும் செய்த பின், காலை, 10:00 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடை பெற உள்ளது. திருப்பணிகள் அனைத்தும், துரிதமாக செய்து முடிக்க, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவிலில் அனைத்து திருப்பணிகள், கான்கிரீட் தளம் அமைத்தல், தேர் செல்லும் சாலைகள் விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகளை, சுப்பையன், ராஜேந்திரன், செல்வக்குமார், ராஜப்பன், கோவிந்தராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar