Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் ... பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு பண்பொழி திருமலைக்குமார சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் திருக்கல்யாணம் கோலாகலம்; மொய் எழுதி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் திருக்கல்யாணம் கோலாகலம்; மொய் எழுதி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 நவ
2023
10:11

தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்வு நேற்று மாலை நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி யாகசாலையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழாவில் முருகப்பெருமான் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக காலை 5:00 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி தெப்பக்குளம் அருகே முருகா மடத்தை சேர்ந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனி சப்பரத்தில் எழுந்தருளி தெய்வானை அம்மனுக்கு காட்சி கொடுத்தார். மாலை 6.30 மணிக்கு தெற்கு ரதவீதி மேலரதவீதி சந்திப்பில் சுவாமி அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. சுவாமியை அம்மன் மூன்று முறை வலம் வந்ததும் தோள் மாலை மாற்றப்பட்டது. பின்னர் சுவாமி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி, அம்மன் கோயிலை அடைந்தனர். நள்ளிரவு ராஜகோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் உள்ளிட்ட அறங்காவலர்கள் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar