பதிவு செய்த நாள்
30
நவ
2023
02:11
தஞ்சை ; இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான். அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டுமென நினைத்தான். அப்படி கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில். இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்தலம் ராஜராஜ சோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால் இத்தலத்தில் என்ன பிரார்த்தனை செய்தாலும் இறையருளால் நிறைவேறும் என்பது இத்தலத்து பக்தர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் முதல் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கான ஆடை அரண்மனை தேவஸ்தானம் சார்பில், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து, அறிவிப்பு பலகை ஒன்று நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டையும், பெண்கள் புடவை,தாவணி, சுடிதார் உடன் கூடிய துப்பட்டா ஆகியவற்றை மட்டுமே அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரை டவுசர், நெல்கின்ஸ் , இறுக்கமான ஆடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.