பாகிஸ்தானில் காபி கடை வைக்க யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்து கோயில்கள் இடிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2023 01:11
பாகிஸ்தான்: சிந்துவில் உள்ள ஹிங்லாஜ் மாதா மந்திர் மற்றும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சாரதா பீட கோயில் இடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்து மதத்தின் இறுதி எச்சங்களை நாட்டிலிருந்து பாகிஸ்தான் தொடர்ந்து அகற்றி வருகிறது என்று ஒரு செய்தி நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிரந்தர உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்த போதிலும், அதிர்ச்சியளிக்கும் வகையில், இரு கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ள ஹலால் காபி ஹவுஸ் அமைப்பதற்காக கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் தான் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இங்கு மத தீவிரவாதிகளால் சிறுபான்மையினருக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தினர்.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) ஒட்டிய மற்றொரு இந்து கோயிலான சாரதா பீத் மந்திர் அழிக்கப்பட்டுள்ளது. கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிரந்தர உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்த போதிலும், இந்து விரோத நடவடிக்கை நடந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த கோயில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கூட அடக்குமுறையிலிருந்து அந்த இடத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு உதவவில்லை. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள இந்து மக்கள் தொடர்ந்து வன்முறை மற்றும் நில ஆக்கிரமிப்புகள் போன்ற பிரச்சினைகளை சந்திந்து வருவது குறிபிடத்தக்கது.