Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுதல் தருவார் அஞ்சனை மைந்தன்.. ... திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 டிச
2023
09:12

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் இன்று (9ம் தேதி) நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசாமி திருக்கோவில் உள்ளது. இங்கு  ராகுபகவான் தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் அருள்பாலித்து வருகிறார். நவகிரக கோவில்களில் பெரும் சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கடை ஞாயிறு விழா நடைபெறுவது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாத கடை ஞாயிறு பெருவிழா கடந்த 1ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, கார்த்திகை கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு தினசரி பகல் 12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், அதனைத்தொடர்ந்து நேற்று  இரவு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று (9ம் தேதி) பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (10ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், மதியம் 2:00 மணிக்கு  சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar