Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோயிலில் கோயிலில் ... ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு உற்சவம்; கோவிந்தா கோஷத்துடன் ரெங்கனை வழிபட்ட பக்தர்கள் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்

பதிவு செய்த நாள்

14 டிச
2023
07:12

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது.

பெருமாள் கோயில்களில் டிச., 23 வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கமாக அத்யயன உற்சவம் எனப்படும் பகல்பத்து துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் விழாவையொட்டி, பெருமாள் ஏகாந்த சேவையில் தாயார் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பாகவதர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து திருநெடுந்தாண்டகம் அர்ச்சகர்களால் வாசிக்கப்பட்டது.

பின்னர் பெருமாளுக்கு மகாதீப ஆராதனை நடந்து, ஏகாதசி மண்டபத்தில் பன்னிரு ஆழ்வார்கள் சந்நதியில் தீர்த்தம், சடாரி சேவை சாதிக்கப்பட்டு, காலை 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் தினமும் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்படும். 10 வது நாளான டிச., 22 மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் வீதி உலா வருகிறார். இக்கோயிலில் பெருமாள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் நிலையில், இங்கு வைகுண்ட வாசல் வழியாகவே தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு ஆகும். இதன்படி மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு, சர்வ அலங்காரத்துடன் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று இரவு தொடங்கி 10 நாட்கள் இராப்பத்து உற்சவம் துவங்கி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar