விருதுநகர், விஜய கரிசல்குளம் வைப்பாற்றில் கரை ஒதுங்கிய விநாயகர், அம்மன் சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2023 08:12
சிவகாசி; விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அருகே வைப்பாற்றில் விநாயகர் சிலை அம்மன் சிலை கரை ஒதுங்கியது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் வழியாக வைப்பாறு செல்கிறது. சமீபத்தில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆற்றில் ஓரளவுக்கு தண்ணீர் வந்தது. இந்நிலையில் விஜய கரிசல்குளம் அருகில் வைப்பாற்றில் கரை ஒதுங்கி கல்லால் ஆன விநாயகர் சிலை அம்மன் சிலை புதருக்குள் கிடக்கின்றது. இதனை அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து ஊராட்சித் தலைவர் கங்காள ஈஸ்வரியிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என ஊராட்சித் தலைவர் தெரிவித்தார்.