ராமேஸ்வரம் கோயிலில் தூண்கள் ரூ. 67 லட்சத்தில் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2023 05:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 3ம் பிரகாரம் தூண்கள் ரூ.67 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 7ம் நூற்றாண்டில் உருவானது. 17ம் நூற்றாண்டில் இக்கோயிலில் உலக பிரசித்த பெற்ற 3ம் பிரகாரம் பிரமாண்ட தூண்களுடன் அமைக்கப்பட்டது. இந்த பிரகாரம் தூண்களில் கலநயம் மிகுந்த வடிவமைப்பு, பிரகாரத்தில் பல சுவாமி, அம்மன் சிலைகள், மனித வாழ்வியல் முறை குறித்த சிற்பங்கள் செதுக்கி இருந்த்து. இதனால் 3ம் பிரகாரம் கட்டட கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கியது. காலப்போக்கில் பிரகார நடைமேடை பகுதியில் தூண்களுடன் சேர்த்து அறைகள் அமைத்து பொருள்களை வைத்தனர். இதனால் 3ம் பிரகார கலைநயத்தை பக்தர்கள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ. 67 லட்சத்தில் பிரகாரத்தின் தெற்கில் உள்ள அறைகளை இடித்து அகற்றி, தூண்களை சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் கலந்த கலவையில் சிற்பங்கள் பொறித்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்பணி முடிய 3 மாதங்கள் ஆகும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.