Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரியில் சிவனின் நவ தாண்டவம்! நவராத்திரியில் சர்வ சவுபாக்கியம் அருளும் ஒன்பது கர உலக நாயகி! நவராத்திரியில் சர்வ சவுபாக்கியம் ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2012
04:10

அந்த காலத்தில், ஒரு ஊரை உருவாக்குவதற்கு முன், கோயிலை உருவாக்கினர். அதற்கு முன்,நீரோட்டம் பார்த்து, மண்ணின் தன்மை அறிந்து, சாலை  அமைத்து, அதன் பின்னரே கோயில் கட்டினர். இதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பர். இதற்கு உதாரணம் தேட வேண்டுமென்றால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னாரு கோட்டைக்கு செல்லலாம். விருதுநகருக்கும், சாத்தூருக்கும் நடுவே, சிமென்ட் ஆலைக்கு நேர் கிழக்கே பயணித்தால், துலுக்கபட்டியை கடந்து, மன்னாரு கோட்டையை அடையலாம். இதன் அடையாளமாக தியாகராஜசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. இது கி.பி. 10ம் நூற்றாண்டில், பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலையொட்டி, கட்டப்பட்ட கற்கோயில் தூர்ந்து போன நிலையில் பாழடைந்து கிடக்கிறது.

சிலைகள் ஏதுமில்லை. தியாகராஜசுவாமி கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவை, பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டிருந்தாலும், பின்னாளில், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், இப்பகுதி பாளையக்காரர் ஒருவரால் புதுப்பிக்கப்பட்டது. அவரது சிலை கோயில் மண்டப தூணில் உள்ளது. கோயில் அருகில், கி.பி. 10ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் உள்ள வாசகம் நம்மை உறைய வைக்கும்.  சூரங்குடி நாட்டில் உள்ள ஆத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த காயமுற் கிழவன் ஸ்ரீவேலன் சிவப்பு கழன் என்பவன், தன் எஜமானன் கலியுக கண்டாடி தான்மா செட்டி என்பவரின் நலனுக்காக, விரதம் இருந்து, தன் தலையை தானே வெட்டி பலியானான் என்ற செய்திதான் அது. இதன்மூலம், அந்த வேலையாளின் விசுவாசம் தெரிய வருகிறது. மன்னாருகோட்டை பகுதியில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளை கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar