Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு ... ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம் ஆங்கில புத்தாண்டு கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
02:01

மயிலாடுதுறை; திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில்  ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இன்று  அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வாழைப்பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  ஆஞ்சநேய சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசியும், 1 ரூபாய் நாணயம் மற்றும் பிரசாதங்களை வழங்கினார். தொடர்ந்து மாலை வெள்ளி ரதத்தில் ஆஞ்சநேய சுவாமி எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 2 ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் ஜெயந்தி விழாவும், ஜனவரி 11 ம் தேதி வியாழக்கிழமை  கோவிலில் அனுமன் ஜெயந்தி நடைபெறவுள்ளது. இரு பெரும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு ஜனவரி 3 ம் தேதி 7 ம் தேதி சிறப்பு ஹோமம் மற்றும் ஜெபங்கள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மாதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமெளவி ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar