Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீனிவாச ... ஞானவாபி வளாக பாதாள அறையில் ஹிந்துக்கள் வழிபட அனுமதி ஞானவாபி வளாக பாதாள அறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமால் வழிபட்ட காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருமால் வழிபட்ட காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2024
10:02

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது. சுவாமி சுயம்புவாக மேற்கு பார்த்தபடி இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 259 வது தேவாரத்தலம் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் கும்பாபிஷேகம், இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 33 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, 160 சிவாச்சாரியார்கள் ஆறு கால பூஜைகள் மற்றும் விசேஷ ஹோமங்கள் நடத்தி வந்தனர். இன்று காலை கலச புறப்பாடு நடைபெற்று, விமானம், ராஜகோபுரம், ரிஷி கோபுரம், பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவர் போன்றவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் விழா காரணமாக, கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், கோவிலை சுற்றியுள்ள எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, பெரிய காஞ்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar