Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோக நாதர் கோவில் விழா; மலர் துாவி ... ஞானவாபி பாதாள அறையில் வழிபாடு துவக்கம்; சிலைகள் வைக்கப்பட்டு ஆரத்தி ஞானவாபி பாதாள அறையில் வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனி சூழ்ந்து கைலாயம் போல் காட்சியளிக்கும் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில்
எழுத்தின் அளவு:
பனி சூழ்ந்து கைலாயம் போல் காட்சியளிக்கும் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில்

பதிவு செய்த நாள்

01 பிப்
2024
02:02

உத்தரகண்ட்; உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், கனாக்சூரி கிராமம், கேதார்நாத் அருகே உள்ள கார்த்திக் சுவாமி கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டு பரமனின் கைலாயம் போல் காட்சியளிக்கிறது.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பழமையான கார்த்திக் சுவாமி எனும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. உத்தரகண்டில் உள்ள கார்த்திகேயனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் இது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முருகன் தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இக்கோயில் உள்ளது.

நாரதர் கொடுத்த ஞானப்பழத்தை, உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்தப் பழம் என் ஈசன் தனது மகன்களான கணபதி, முருகனிடம் கூறினார். உலகைச் சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தனக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி. திரும்பி வந்த கந்தன் அண்ணன் கையில் கனியைக் கண்டார். கோபம் கொண்டு கைலாசத்தை விட்டு வெளியேறி க்ரோஞ்ச் பர்வத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சிறப்பு மிக்க இக்கோயிலில் முருகப்பெருமான், கார்த்திகேயன் கார்த்திக் சுவாமி என்று வழிபடப்பட்டு வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள கடும் பனியில் கோவில் முழுவதும் எங்கும் வெள்ளை நிறமாக சிவனின் கைலாயம் போல் காட்சியளிக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar