ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.58 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2024 04:02
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.58 கோடி வருவாய் கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் திறந்து, காணிக்கைகளை சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 38 ஆயிரத்து 347 ரூபாயும், தங்கம் 70 கிராம், வெள்ளி 12 கிலோ 890 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இந்த காணிக்கையை கோயில் ஊழியர்கள், சிவனடியார் பக்தர்கள் எண்ணினார்கள்.