Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம ஜென்ம பூமியை மீட்டுவிட்டோம்.. ... அயோத்தி ராமர் கோயிலில் அமிதாப் பச்சன் வழிபாடு அயோத்தி ராமர் கோயிலில் அமிதாப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2024
01:02

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் இன்று அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர். முன்னோர்களுக்கு திதி, தெர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். முன்னோர்களுக்கான பித்ரு கடன் பூஜைகளை நிறைவேற்றிய பிறகு சேதுக்கரை கடலில் புனித நீராடினர். சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். சேதுக்கரை அருகே சின்னக்கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார், தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மூலவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தனர். சேதுக்கரை ஊராட்சி சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை உணவாக கொடுத்தனர். காகங்களுக்கு அன்னமிட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டன. திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar