காரைக்கால் காரைக்காலில் தை அமாவாசையொட்டி இன்று கடற்கரையில் கைலாசநாதர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று கடற்கரையில் காலையில் ஏராளமானவர்கள் இறந்த முன்னோர்களுக்காக பிராத்தனை செய்தனர். பின் கடற்கரையில் எழுந்தருளிய கைலாசநாதர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து கைலாசநாதர் கடற்கரை சாலை, நேருவீதி. மாதாக்கோவில் பாரதியார் சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதி உலா வந்து அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை கோவில் தனி அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதுப்போல் தை அமாவாசை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.