Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரம் தருவாள் வாராகி; மகா வாராகி ... வசந்த பஞ்சமி; உ.பி, பிரயாக்ராஜில் புனித நீராட பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர் வசந்த பஞ்சமி; உ.பி, பிரயாக்ராஜில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா; விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா; விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 பிப்
2024
10:02

நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழாவை ஒட்டி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர்.

விழாவையொட்டி நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து சந்தன கருப்பு கோவிலில் வந்து சேர்ந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீ வட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர்.இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து நேற்று இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யபட்டது.இதை தொடர்ந்து வரும் 16, 20, 23-ந் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து அருள் பாலிப்பார்.இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல்,மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். வரும் 27-ம் தேதி செவ்வாய்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஊன்றி பின்னர் கழுகு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும்,தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் நடைபெறும்.மறுநாள் காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரியன், திருக்கோவில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொதுசுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா மேற்பார்வையில் செயல் அலுவலர் சின்னச்சாமி, துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப்,நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட காவல்துறையினரும் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று ... மேலும்
 
temple news
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே தேர் திருவிழாவின் போது, அச்சு முறிந்ததால், சுவாமியுடன் தேர் சாய்ந்து ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar