Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலைகீழாக நிழல் விழும் அதிசய கோவில்; ... மாசி கிருத்திகை; வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை மாசி கிருத்திகை; வாலிபாளையம் கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோடர் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்; பழங்குடி மக்களுடன் நடனம்
எழுத்தின் அளவு:
தோடர் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்; பழங்குடி மக்களுடன் நடனம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2024
01:02

ஊட்டி; ஊட்டி முத்தநாடு மந்து தோடர் பழங்குடியினர் கோவிலில் மாநில கவர்னர் ஆர்.என். ரவி, தனது மனைவியுன் சுவாமி தரிசனம் செய்து, மக்களிடம் கலந்துரையாடினார்.

மாநில கவர்னர் ஆர்.என். ரவி, தனது மனைவி லட்சம் ரவியுடன் நேற்று நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகை தந்தார். கலெக்டர் அருணா மற்றும் நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் ஆகியோர் வரவேற்றனர். ஊட்டி ராஜ்பவனில் தங்கியுள்ள கவர்னர், தனது மனைவியுடன், இன்று காலை, 11:00 மணிக்கு, ஊட்டி தலைகுந்தா அருகே உள்ள தோடர் பழங்குடியினர் மக்கள் வாழும் முத்தநாடு மந்து கிராமத்திற்கு சென்றார். அவருக்கு, தோடர் மக்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஸ்ரீ தேக்கிஸ் அம்மன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார். பிறகு, கிராம இளைஞர் இளவட்ட கல் தூக்கியதை பார்வையிட்டு மகிழந்தார். கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். தோடர் பழங்குடியினர் பெண்கள் காட்சிப்படுத்திய கைவினை பொருட்களை பார்வையிட்டார். தோடர் மக்களின் பாரம்பரிய நடனத்தை ரசித்த கவர்னர், அவர்களுடன் இணைந்து நடனமாடினார். மக்களிடம் கலந்துரையாடுகையில், இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை. கடந்த, 10 ஆண்டுகளில் இயற்கை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதில், பழங்குடியின மக்களின் பங்கு மகத்தானது. அதனால்தான், தோடர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்திற்கு விரும்பி வந்துள்ளேன். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியான தருணம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar