Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ரத சப்தமி விழாவில் ... கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2024
04:02

பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.

எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் நிலையில், சூரிய ஜெயந்தி தினம் ரத சப்தமி விழாவாக போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயணத்தில் சிறுக சிறுக வெப்பத்தை கூட்டுகிறார் என்பது சாஸ்திரம். ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் பல இருந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக கருதப்படுவது ரத சப்தமி விரதம் ஆகும். இதன்படி பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் புஷ்ப ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8:00 மணி முதல் மாலை வரை அனைத்து வீதிகளிலும் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்துத்துடன், அனைத்து வீடுகளிலும் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை, காந்திஜி விழாகுழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் நேற்று காலை கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். பின்னர் மாலை 5:00 மணி தொடங்கி வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar