Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 240 ஏக்கரில் பிரமாண்ட அஸ்வமேத காயத்ரி ... மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் நாளை வெண்ணெய்த்தாழி சேவை; பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் நாளை வெண்ணெய்த்தாழி சேவை; பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 பிப்
2024
01:02

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நாளை வெண்ணெய்தாழி சேவை நடைபெறும்.  பக்தர்கள் தெப்பக்குளப்பகுதியில் விளக்கேற்றி சுவாமியை பிரார்த்தித்து வருகின்றனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப். 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் கனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. நேற்று மாலை தெப்பக்குளத்தில் தெப்பத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றி, தெப்பம் கட்டும் பணி துவங்கியது. ராஜகோபுர வாசலில் மாலையில் சுவாமி எழுந்தருளி சூரிய ஒளியால் அபிேஷகம் நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி ஸ்ரீதேவி,பூதேவியருடன் திருவீதி வலம் வந்தார். இன்று காலை திருவீதி புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு அரண்மனை மண்டகப்படி சார்பில்  குதிரை வாகனத்தில்திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிருந்துபுறப்பட்டு, தெப்பக்குளக்கரை மண்டபம் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 10:10 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். கடந்த சில நாட்களாகவே தெப்பக்குளத்தின் தெற்கு கரையில் பெண்கள் குடும்பம்,குடும்பமாக வந்து  விளக்கேற்றி  ஏற்றி வேண்டுதலை நிறைவேற்ற வேண்டினர்.  திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் தொன் நம்பிக்கையாக உள்ளது.  பிப்.24 ல்  பகல் தெப்பமும், இரவு தெப்பமும் நடைபெறும்.  பிப்.25 ல் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar