ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா : நாள் முழுவதும் நடைதிறந்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 04:03
ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்ச் 8ல் மாசி மகா சிவராத்திரி விழா நடக்க உள்ளதால், அன்று முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். மார்ச் 1ல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய விழாவான மார்ச் 8ல் மாசி சிவராத்திரி விழா கோயிலில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கோயில் சுவாமி சன்னதியில் அன்று முழுவதும் கங்கை நீர் அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கும். இதில் வட தென் மாநில, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அன்று முழுவதும் கோயில் நடை திறந்து இருப்பதால், பக்தர்கள் பகல் இரவு முழுவதும் சுவாமி தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.