மகா சிவராத்திரி : திருப்புத்தூர் கோயில்களில் நான்கு கால பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 05:03
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ல் இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சிவராத்திரிவிழாவை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நடை திறந்து பக்தர்கள் சுவாமி வழிபாடு நடக்கும். மூலவர் திருத்தளிநாதர் சுவாமிக்கு இரவு 8:30 மணிக்கு 12 வகை அபிஷேகங்கள் நடந்து முதல்கால பூஜை நிறைவடையும். சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சியளிக்க சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து இரண்டாம் காலம் இரவு 11:30 மணிக்கும், 3ம் காலம் அதிகாலை 2:30 மணிக்கும், 4ம் காலம் அதிகாலை 4:30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். இதனிடையே இரவு 10:30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 12:00 மணி அளவில் அகத்தியலிங்கத்திற்கு பக்தர்கள் வில்வ இலைகளால் அர்ச்சித்துவழிபடுவர். மேலும் நாளை பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு பிரதோஷநாதர்-அம்பாள்,நந்தித்தேவருக்கும் அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமி பிரகாரம் வலம் வருதல் நடைபெறும். மேலத் திருத்தளிநாதர் கோயிலிலும் நாளை இரவில் நான்கு கால பூஜைகள், பிரதோஷ வழிபாடு நடைபெறும். தி.புதுப்பட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் நாளை மாலை 4: 00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கும்.மாலை 6:00 மணிக்கு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு முதலாவது, இரவு 11:00 மணிக்கு இரண்டாவது, அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாவது, அதிகாலை 3:00 மணிக்கு நான்காம் கால ப;ஜைகள் நடைபெறும். தொடர்ந்து 108 கலசசாபிேஷகம், 108 சங்குகாபிேஷகம் தீபராாதனை நடைபெறும். ஏற்பாட்டினை விழாக்குழு,கிராமத்தினர் செய்கின்றனர்.