ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி ஏகாதசி சிறப்பு ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 06:03
திருச்சி; திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பழமையான கோவில். ராஜகோபுரம் உட்பட வெள்ளை கோபுரம், வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில்களுடன் அமைந்த ரெங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுரங்கள் உள்ளன. சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று மாசி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் நம்பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.