மகா சிவராத்திரியில் திறக்கப்பட்ட கயிலாய வாயில்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2024 10:03
செஞ்சி; செத்தவரை சொக்கநாதர் கோயிவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய வாசல் திறப்பு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மாலை 5.40மணிக்கு உற்சவர் மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாய சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிவஜோதி மோன சித்தர் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் கோவில் உலா நடந்தது. இரவு 8 மணிக்கு மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனையும், 11 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக ஆராதனையும் இரவு 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேக ஆராதனையும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.