Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவர் கால அய்யனார் சிற்பம் ... முக்களத்தி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் முக்களத்தி அம்மன் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

09 மார்
2024
11:03

மேட்டுப்பாளையம்; காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவில் அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை,7:30 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு வகையான, திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12:30 மணிக்கு பெள்ளாதி சங்கமேஸ்வரர் கோவிலில் பூஜையும், சனிக்கிழமை அதிகாலை, 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, காலை, 5:30 ஐந்து நான்காம் கால பூஜையும் நடைபெற உள்ளது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் அஸ்வின் சிவம், ஸ்ரீநாத் சிவம் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மாலை, 7:00 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. அடுத்த இரவு 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை,4:30 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை, 6:00 மணிக்கு தீபாரதனையும், பேரொளி வழிபாடும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர். நகரில் பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar