ராமரின் பெயரை உச்சரித்து.. 4000 கி.மீ., பாதயாத்திரை; அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நடந்தே செல்லும் பெண்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2024 11:03
பரமக்குடி; நதிகள் மற்றும் வனங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்த, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து சிப்ராபதக் என்ற பெண் 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரையாக ராமேஸ்வரம் செல்கிறார். இவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிவராத்திரி விழாவில் வழிபாடு நடத்தினார். அவர் கூறிப போது: அயோத்தியில் இருந்து பாதயாத்திரையாக ராமேஸ்வரம் வரை 4,000 கி.மீ., பாதயாத்திரையாக செல்கிறேன். இது போன்ற யாத்திரைகளை பலமுறை நடத்திய உள்ளேன். தற்போது நர்மதை நதி உட்பட இங்குள்ள வைகை ஆறு என அனைத்தும் வற்றி உள்ளது. ராமன் சென்ற திசைகளில் உள்ள நதிகளை தரிசித்து வருகிறேன். ஆனால் எங்குமே தண்ணீர் இல்லாத நிலையே உள்ளது. மேலும் நதிகள் குறித்து மட்டுமல்லாது, வனங்களை பாதுகாக்கும் நோக்கில் 10 லட்சம் மரக்கன்றுகளை இதுவரை நட்டு வைத்துள்ளேன். ஆகவே ராமரின் பெயரை உச்சரித்து இந்த யாத்திரையை நிறைவு செய்கிறேன். இந்த யாத்திரைக்கு ராம் ஜானகி யாத்ரா என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார். அப்போது சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி மற்றும் டிரஸ்டி ரமேஷ்பாபு உட்பட முன்னாள் டிரஷ்டிகள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் வழங்க வரவேற்பு அளித்தனர்.