வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி; இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2024 11:03
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நேற்று இரவு 7:30 மணி முதல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இரவு 8:30 முதல் காலை 4:30 மணி வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெற்றது. இரவு 7:30 மணிமுதல் பல்வேறு குழுவினரின் பக்தி பாடல்கள் கச்சேரி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வழிபாட்டில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹரிஹரன் ஆகியோர் செய்துள்ளனர்.