Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்கேஸ்வரருக்கு மகா ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா லட்சார்ச்சனை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி; தஞ்சை பெருவுடையாருக்கு விடிய விடிய நடைபெற்ற அபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி; தஞ்சை பெருவுடையாருக்கு விடிய விடிய நடைபெற்ற அபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 மார்
2024
12:03

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்தரை பெருவிழா, அன்னாபிஷேகம், திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ர தரிசனம், பிரதோஷம், மகா சிவரத்திரி போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்நிலையில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று இரவு துவங்கி, இன்று (09ம் தேதி) காலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், நேற்று இரவு 10:30 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12: 00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.  இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, இன்று(09 ம் தேதி) காலை 5 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக, பிரதோஷத்தையொட்டி, மகா நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள்: மகா சிவராத்திரி விழாவையொட்டி, பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நேற்று மாலை 6:00 மணி முதல் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம், நாத சங்கமம், பட்டி மன்றம், பக்தி இன்னிசை, தப்பாட்டம், கரகாட்டம், காளியாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் என இன்று காலை 6:00 மணி வரை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான நேற்று இரவு ... மேலும்
 
temple news
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar