மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு பழையூரில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரி பூஜை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு பழையூரில் உள்ள ராமலிங்கேஸ்வரருக்கு நேற்று மாலை அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மகா சிவராத்திரி முன்னிட்டு பக்தர்கள் இரவு முழுக்க ராமலிங்கேஸ்வரர் சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் அமைந்துள்ள முகிலேஸ்வரருக்கு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.