திருப்பதி தரிசன விதிகளை தேவஸ்தான முன்னாள் குழு உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்; பூமனா கருணாகர் ரெட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 01:03
திருப்பதி: திருப்தி, ஸ்ரீவாரி தரிசனத்திற்கான விதிகளை தேவஸ்தான முன்னாள் குழு உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி கூறியுள்ளார்.
இது குறித்து பூமனா கருணாகர் ரெட்டி கூறியதாவது; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் (மனைவி, குழந்தைகள், தாய் மற்றும் தந்தை) ஒரு வருடத்தில் சில நேரங்களில் மட்டுமே ஸ்ரீவாரி தரிசனம் செய்ய வாரியம் அனுமதியளித்துள்ளது. ஆனால், சில முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களை அழைத்துச் சென்று ஸ்ரீவாரி தரிசனத்திற்கு மீண்டும் மீண்டும் வருவதன் மூலம் இந்த விதியை மீறியுள்ளனர். முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வர முடியும் என்றும், மற்றவர்களை உடன் அழைத்துச் சென்றால் எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் இவ்வாறு அவர் கூறினார்.