அயோத்தி ராம ஜென்மபூமியில் 45 நாட்கள் நடைபெற்று வந்து மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 02:03
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் 45 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை மற்றும் ராக சேவை எனும் இசை வழிபாடு நடைபெற்று வந்தது. தினமும் ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 45 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவடைந்தது. பேஜாவர் மடாதிபதியும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் அறங்காவலருமான ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த் ஜி மகராஜ் முன்னிலையில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபட்டனர்.