திருச்செந்தூர் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம்; திங்கள் முதல் வெள்ளி வரை தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 03:03
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ளூர் பக்தர்களை தரிசனம் செய்ய தனிவழியில் அனுமதிக்கப்பட்டு வந்தது சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து அனைத்து சமுதாய மக்கள் சார்பில் திருச்செந்தூர் உதவி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில், இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.