மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஏப்.11ல் துவக்கம்: ஏப்.21 திருக்கல்யாணம், ஏப்.,23 ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2024 08:03
மதுரை, :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது என கோயில் இணைக்கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஏப்.11 ல் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. ஏப். 12 காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். ஏப்.13 முதல் 18 வரை தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.18 அன்று இரவு 7:35 க்கு மேல் 7:59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடைபெறும். ஏப். 20 மாலை 6:30 இரவு 11:30 வரை திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் நடைபெறும். அன்று மாலை பூப்பல்லக்கில் மீனாட்சி - சொக்கநாதர் நான்கு மாசி வீதிகளிலும் வீதிஉலா வருவர். ஏப்.22 காலை 6:05 முதல் 6:45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். ஏப். 23 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவுபெறும். ஏப். 22 அன்று தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.,23 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவும் நடைபெறும் என தெரிவித்தார்.