மொரிஷியஸ் மங்கலமூர்த்தி மகாதேவர் கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜலாபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2024 11:03
மொரிஷியஸ்; ஜனாதிபதி திரௌபதி முர்மு மொரிஷியஸ் மங்கலமூர்த்தி மகாதேவருக்கு ஜலாபிஷேகம் செய்தார், புனித கங்கா தலாவ்வில் பிரார்த்தனை செய்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ளார். மொரீஷியஸ் குடியரசின் 56 வது ஆண்டு விழா மற்றும் 32 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி முர்முவை மொரிஷியஸ் பிரதமர் ஜுக்நாத் முழு அரசு மரியாதையுடன் வரவேற்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலநது கொண்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு மொரீஷியஸில் உள்ள மங்கலமூர்த்தி மகாதேவர் கோயிலில் ஜலாபிஷேகம் செய்து சிவனை வழிபாடு செய்தார். மேலும் புனித கங்கா தலாவ்வில் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து ஆப்ரவாசி காட் மற்றும் போர்ட் லூயிஸில் உள்ள சர்வதேச அருங்காட்சியகத்தில் உள்ள மொரிஷியஸ் மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கங்கா தலாவ் வளாகத்தை மத, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக மறுசீரமைப்பதில் மொரிஷியஸ் அரசாங்கத்திற்கு இந்தியா உதவுவதாக தெரிவித்தார்.