பதிவு செய்த நாள்
15
மார்
2024
01:03
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கொசஸ்தலையாற்றில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆற்று மணலில் முருகன் கற்சிலை இருப்பதாக, உள்ளூர்வாசிகளிடம் கூறினர். கிராமத்தினர் தகவலையடுத்து, திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை வந்தனர். ஆற்று மணலுக்குள், 3.5 அடி உயரம், 150 கிலோ எடையிலான முருகன் கற்சிலையை கண்டெடுத்தனர். சிலையில், தலையில் மகுடமும், நான்கு கைகளும், இரண்டு கால்களும் உள்ளன. சிலை அமைப்பு கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். சிலையை மீட்ட திருத்தணி தாசில்தார் மதியழகன், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.