வரகுனேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 01:03
சாலைகிராமம்; சாலைகிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில்பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து காப்பு கட்டி கொண்டனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட சாலைகிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வள்ளி,தெய்வானை சன்னதியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற காப்பு கட்டுதலுக்காக அதிகாலையில் சுவாமிகளுக்கு பால்,பன்னீர், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன்,ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டிய பின்னர் பக்தர்களும் காப்புக் கட்டிக் கொண்டனர்.விழாவில் தேவஸ்தான செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் சாலை கிராமம், இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா வருகிற 25ம் தேதி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம்,பறவைகாவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாலைக்கிராமம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.