Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... வரகுனேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் வரகுனேஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2024
01:03

திருநெல்வேலி; தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த சிறப்பு மிகுந்த நாள் பங்குனி உத்திரம். பரமசிவன், பார்வதியை பங்குனி உத்திர நாளில் மணந்ததாக ஐதீகம் உள்ளது. பக்தனின் எமபயம் ஒழித்து முக்தி அளித்து ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு மிகுந்தது. இத்திருவிழாக் காலத்தில் மட்டுமே கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர்லிங்கம் கருவறையில் இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. திருவிழா நாட்களில் மாலை 6.30மணிக்கு உற்சவர் மண்டபத்தில் உடையவர் லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 4ம் திருநாள், 18ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதர் தோன்றிய வரலாறு வாசிக்கும் நிகழ்வு, மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாள் 24ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர். விழாவில் அறங்காவலர் சொனா.வெங்கடாசலம் உட்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar