மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 03:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா 16ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் 7ம் நாளான இன்று 22ம் தேதி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். நாளை 23ம் தேதி வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு காட்சி, 24ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.