குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2024 09:03
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் வையாபுரி தெப்பம் மற்றும் வெள்ளி ரதமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. இன்று, தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.