Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகமுனேஸ்வரர் கோவில் தேரோட்டம்; ... குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் பரவசம் குன்றக்குடியில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

23 மார்
2024
03:03

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி புஷ்பவனேஷ்வரரும் சவுத்தரநாயகி அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின் தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேர் நிலையை விட்டு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் கிளம்பியது. நான்கு ரத வீதிகளிலும் பெண்கள் வாசல் தெளித்து கோலமிட்டு அம்மனையும் சுவாமியையும் வரவேற்றனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர், சர்பத், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு நிலையை விட்டு கிளம்பிய தேர் காலை 11:30 மணிக்கு வந்தடைந்தது. தேர் நிலையை வந்தடைந்த உடன் பக்தர்கள் காய்கறிகள், பழங்களை சூறையிட்டனர். தேர் நிலையை வந்தடைந்த பின் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை (24ம் தேதி) தீர்த்தவாரியுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar