Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகமுனேஸ்வரர் கோவில் தேரோட்டம்; ... குன்றக்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் பரவசம் குன்றக்குடியில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

23 மார்
2024
03:03

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி புஷ்பவனேஷ்வரரும் சவுத்தரநாயகி அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின் தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேர் நிலையை விட்டு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் கிளம்பியது. நான்கு ரத வீதிகளிலும் பெண்கள் வாசல் தெளித்து கோலமிட்டு அம்மனையும் சுவாமியையும் வரவேற்றனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர், சர்பத், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு நிலையை விட்டு கிளம்பிய தேர் காலை 11:30 மணிக்கு வந்தடைந்தது. தேர் நிலையை வந்தடைந்த உடன் பக்தர்கள் காய்கறிகள், பழங்களை சூறையிட்டனர். தேர் நிலையை வந்தடைந்த பின் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை (24ம் தேதி) தீர்த்தவாரியுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar