Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ... பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்; இன்று மாலை தேரோட்டம்.
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்; இன்று மாலை தேரோட்டம்.

பதிவு செய்த நாள்

24 மார்
2024
10:03

பழநி; பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.

பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.18 கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து புனித நீரை தீர்த்தக்காவடியாக எடுத்து வந்தனர். திருவிழாவில் இன்று வரை வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெற்றது. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

ஆறாம் நாளான நேற்று திருஆவினன்குடி கோயில் முன் (மார்ச் 23ல்) இரவு 7:01 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷமிட்டனர். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற்றது. பங்குனி உத்திர தினமான இன்று (மார்ச் 24) அதிகாலை தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். கிரிவீதியில் மாலை 4:00 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறும். அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடக்கும். மார்ச் 25,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, மார்ச்.26,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மார்ச் 27 ல் இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறும். திருக்கல்யாண உற்ஸவத்தில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5ல் ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில், கோவிலில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே ... மேலும்
 
temple news
மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. ஒற்றுமை, ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar