Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருமலை ஸ்ரீவாரி கோயிலில் தங்க ... வெற்றிலை அலங்காரத்தில் ஊட்டி மாரியம்மன் வீதி உலா வெற்றிலை அலங்காரத்தில் ஊட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

10 ஏப்
2024
12:04

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பாரம்பரிய கருவி வாயிலாக நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஆண்டு தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா நேற்று துவங்கியது. நேற்று மாலை, பக்தர்கள் பல்வேறு வகை மலர்களை, பிரசன்ன விநாயகர் கோவிலிலிருந்து, மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு வகை வண்ண மலர்களால், வே தமந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு பூச் சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சூலத்தேவருடன் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிகளிடம் அனுமதி பெற்று, திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. பாரம்பரியமுறைப்படி, வாத்தியம் கொண்டு, நோன்பு சாட்டுதல் அறிவிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேர்த்திருவிழாவில் , வரும், 16ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 18ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, கிராமசாந்தி நிகழ்ச்சியும், 19ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றமும் நடக்கிறது. அன்று, மதியம், 2:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி துவங்கி, 23ம் தேதி, இரவு, 10:00 மணி வரை நடக்கிறது. 24ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு, மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45க்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி, மாலை, 4:00 மணிக்கு, தேரோடும் வீதிகளில்
திருத்தேரோட்டம் நடக்கிறது. தினமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வருதல், 26ம் தேதி, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை, வான வேடிக்கை என, ஏப்.,27 வரை தே ர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ் கோர்ஸ் சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar