கூடலுார் காளியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 04:04
கூடலுார்; கூடலுார் காளியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கூடலுார் காளியம்மன், செல்வகாளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் மழை வேண்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அபிஷேகம், ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.