பதிவு செய்த நாள்
12
ஏப்
2024
04:04
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் தண்டு மாரியம்மன் கோவில், 68ம் ஆண்டு திருவிழா துவங்கியது. கடந்த, 2ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு விழா, பூ கம்பம் போடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்மாதம், 15ல் திருக்கல்யாணம், 16ல் சக்தி அழைத்தல், 17ல் சக்தி கரகம் கோவில் வந்தடைதல், தொடர்ந்து, அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அக்னி கரகம், பூ கம்பம் அகற்றுதல் நடக்கிறது. 18ல் மஞ்சள் நீர் விழாவும், 19ல் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தண்டு மாரியம்மன் ஆராதனை மற்றும் வழிபாட்டு அறக்கட்டளை மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.