Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ... வெற்றிலை அலங்காரத்தில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பு வெற்றிலை அலங்காரத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
02:04

மானாமதுரை; மானாமதுரையில் ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நாளை காலை 6:15 மணியிலிருந்து 7:31 மணிக்குள் நடைபெற உள்ளது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டத்திற்கு கோயிலின் முன்பாக இருந்த பெரிய தேருக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடனும், பின்னால் இருந்த சிறிய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினர். இந்தத் தேர்களுக்கு முன்னால் இருந்த சிறிய தேர்களில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் எழுந்தருளினர்.காலை 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க துவங்கினர்.தேர் 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து 10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேருக்கு முன்பாக ஏராளமான சிவனடியார்கள் கைலாய வாத்தியம் இசைத்த படியும், மானாமதுரை வீரவிதை சிலம்பாட்ட குழு தலைவர் பெருமாள் தலைமையிலான சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் ஆடியபடியும் சென்றனர்.தேரில் இருந்த சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் சோமசுந்தரம், ராஜேஷ், குமார், பரத்வாஜ் ஆகியோர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளையும் செய்தனர். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேர் மீது பூக்கள் மற்றும் காய்கறிகள், பழங்களை தூவி சுவாமிகளை வழிபட்டனர். 4 ரத வீதிகளிலும் ஏராளமானவர்கள் பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மோர், குளிர்பானங்கள்,தண்ணீர்ப்பந்தல் அமைத்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன்,மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி,துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar