Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ... பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
06:04

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில்  பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் இருந்தது.  இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் , ருத்ர பாகம் என மூன்று பாகங்களையும், பிற்கால சோழர்கள் காலப் பாணியில் ஆவுடையில் நான்கு வர்க்கம் வைத்தும், லிங்க பானத்தின் தலைப் பகுதி அரைக் கோள வடிவில் இருந்தது.  லிங்க பானத்தின் தலைப்பகுதியான ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன் இருந்தது.  இதனை கண்டறிந்த கோவையை சேர்ந்த அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள், அரசமரத்துக்குள் சிக்கியிருந்த சிவலிங்கத்தை மீட்டு, மேற்கூரை ஒன்றை அமைத்து வழிபாட்டிற்கு ஏற்ப பீடங்கள், புதிதாக நந்தியம் பெருமான் வழங்கி ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.  

இது குறித்து அரன் பணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் கூறியதாவது: எங்கள் குழுவினர், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்,  வெட்ட வெளியில் சிதைந்து கிடக்கும் சிவலிங்கங்களை மீட்டு, திருப்பணி செய்து வருகிறோம். கல்லுாரி மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், அருந்தவபுரம் கிராமத்தில் அரச மரத்தில் சிவலிங்கம் சிக்கியுள்ள தகவல் கிடைத்தது. ஊருக்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது, அப்பகுதியில் பெரிய சிவாலயமாக இருந்து சிதைந்து, சிவலிங்கம் மட்டும் அரச மரத்தின் அடியில் சிக்கி இருக்கலாம் என்பதை உறுதி செய்தோம். இந்த சிவலிங்கம் 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலம் என தெரியவந்துள்ளது. விரைவில் கோவில் கட்ட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar