Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் விடிய விடிய தசாவதார ... பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா பூமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து வழிபாடு; மக்களுக்கு மன நிம்மதியுடனும், மகிழ்ச்சி கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து வழிபாடு; மக்களுக்கு மன நிம்மதியுடனும், மகிழ்ச்சி கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
01:04

திருப்பூர்: சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில், ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து வழிபாடு நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், முருகப் பெருமான் பக்தர் கனவில் தோன்றி, குறிப்பிடும் பொருளை வைத்து வழிபடுவது வழக்கம். தாராபுரத்தைச் சேர்ந்த சபாபதி, 48, என்பவர் கனவில் தோன்றி குறிப்பிட்டவாறு, நேற்று உத்தரவுப் பெட்டியில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை நடந்தது. இதற்கு முன் கடந்த பிப்., 9ம் தேதி முதல் நிறைநாழி நெல் வைத்து பூஜை நடந்தது. கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது:ஆண்டவர் உத்தரவு பெற்ற பின் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தும். தற்போது முருகப் பெருமானின் ஆயுதமான வேல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டிலும் ஒரு முறை இது போல் வேல் வைத்து வழிபாடு நடந்தது.வேல் என்பது ஞானத்தை குறிப்பதாக உள்ளது. இது இறைவன் தன் பக்தர்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் உள்ளது. மக்கள் மத்தியில் அஞ்ஞானம் மறைந்து மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பதையும் இது குறிக்கலாம். மக்கள் மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வர் என்ற குறிப்பை உணர்த்துவதாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar