Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து வழிபாடு; மக்களுக்கு மன நிம்மதியுடனும், மகிழ்ச்சி கிடைக்கும்! சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள்பாலித்த கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள்பாலித்த கள்ளழகர்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
12:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இங்கு ஏப்.18 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி நேற்று முன்தினம்(ஏப்.23) அதிகாலை 3:30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் காலை 10:00 மணிக்கு மகிழம்பூ, செண்பகப்பூ, தாமரை, மல்லிகை, ஏலக்காய் மாலை என தனக்குரிய வாசனை மலர்களை சூடி குதிரைவாகனத்தில் அமர்ந்தார். அப்போது பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து ஆயிரம் பொன் சப்ரத்தில் எழுந்தருளி, இரவு 3:30 மணிக்கு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். பல ஆயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அழகரை வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களும் பரமக்குடி நகர் முழுவதும் பல நூறு இடங்களில் அன்னதானம் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக அமர்ந்து அருள் பாலித்தார். அப்போது கருப்பண சுவாமியிடம் சிறப்பு பூஜைகள் நடத்தி, வைகை ஆற்றில் உள்ள மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். இங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் வழங்க அழகரை தரிசித்தனர். தொடர்ந்து வாணியர் மண்டகப்படிக்கு இரவு 11:00 மணிக்கு அழகர் சென்றடைந்தார். அங்கு மச்ச, கூர்ம, ராமர், மோகினி என பல்வேறு அவதாரங்களில் விடிய விடிய அருள்பாலித்தார். ஏ.டி.எஸ்.பி., காந்தி, ராமநாதபுரம் எஸ்பி., சந்தீஷ் தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar