Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சக்கணக்கான மக்கள் மனங்களை ... குருவித்துறையில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ; வரும் 29ல் துவக்கம் குருவித்துறையில் குரு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் படித்துறை வளாகத்தில் நிலவும் சுகாதாரக்கேடு
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் படித்துறை வளாகத்தில் நிலவும் சுகாதாரக்கேடு

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
11:04

சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கை கால் சுத்தம் செய்யும் சுரபி நதி படித்துறை முழுவதும் அசுத்தமாக உள்ளது. கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென உள்ள தனி கோயிலாகும். இங்கு மூலவராக சனீஸ்வர பகவான் உள்ளார். சுயம்புவாக எழுந்தருளியவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். கோயில் வளாகத்தில், கோயிலிற்கு முன்புறம் ஒடும் சூரபி நதி வாய்க்காலில் குளித்தும், கை, கால்களை சுத்தம் செய்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கோடை காலம் என்பதால் சுரபி நதி வாய்க்கால் சாக்கடை நீரால் தேங்கி நிற்கிறது. துர் நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் கழற்றி போட்ட உடைகள் மலை போல் குவிந்து, வாய்க்கால் கரையில் தீ வைத்து எரிக்கப்பட்டு அப்படியே குப்பையாக கிடக்கின்றது. பக்தர்கள் படித்துறையில் செய்யும் கிரக நிவர்த்தி பூஜை பொருள்கள் அப்படியே கொட்டிக் கிடக்கின்றது. படித்துறை வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் கோயில் படித்துறையை சுத்தமாக பராமரிக்கவும், பக்தர்கள் போட்டு விட்டு செல்லும் உடைகளை சேகரம் செய்து, வேறு வெளியிடங்களுக்கு கொண்டு சென்று போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குச்சனூருக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் கண்டிப்பாக படித்துறையில் கை கால்களை சுத்தம் செய்து, அங்குள்ள விநாயகரை வழிபட்டு, பின் சனீஸ்வர பகவானை தரிசிக்க செல்கின்றனர். ஆண்டிற்கு லட்சக்கணக்கில் வருவாயை அள்ளி தரும் இந்த கோயில் படித்துறையை சுத்தமாக பராமரிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar