Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை சஷ்டி; பால தண்டாயுதபாணி ... காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடத்தில் 48ம் நாள் மண்டல பூஜை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில்களுக்கு அதிக வரி பிரச்னை தீரும் வரை வழக்கு தொடரும் சொல்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஜி
எழுத்தின் அளவு:
தமிழக கோவில்களுக்கு அதிக வரி பிரச்னை தீரும் வரை வழக்கு தொடரும் சொல்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஜி

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
03:04

பொள்ளாச்சி;சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மிக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா, பொள்ளாச்சியில் நடந்தது. அதில், பங்கேற்ற பொன் மாணிக்க வேல், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38,688 கோவில்களில் நிர்வாகம் நடத்துவதாக கூறுகின்றனர். அதில், 34,119 கோவில்களில் ஒரு நாள் வருமானம், 13.69 பைசா முதல், 27 ரூபாய் வரை தான். இந்த கோவில்களுக்கும் வரி போடப்படுகிறது. கடந்த ஆட்சியில், 2017 - 18ம் ஆண்டு, 340 கோடி ரூபாய்; 2018 - 19ம் ஆண்டு, 380 கோடி ரூபாய் வரி போட்டுள்ளனர். தற்போது இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும், 2021ல், 427 கோடியே, 87 லட்சம் ரூபாய் வரி போட்டுள்ளனர். இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. இது மட்டுமல்லாமல், ஆடிட் வரி என அதற்கு ஒரு வரி வசூலிக்கின்றனர். பகைவர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் கூட இந்தளவு கோவில் மீது வரி போடவில்லை. தற்போது, 2,000 ரூபாய்க்கு ஓட்டு வாங்கும் ஜனநாயகத்தில், வரி போட்டது மட்டுமல்லாமல் மாதாமாதம் கையாடல் குறித்து கண்டறியப்படுகிறது. அரசை தேர்வு செய்து, கோவில்களை ஒப்படைக்கிறோம். ஆனால், கையாடல், நம்பிக்கை துரோகம் செய்வது ஏற்க முடியவில்லை. ஒரு டீ விலை 15 ரூபாய். ஆனால், கோவில் வருமானம் 14 ரூபாய் தான். ஒரு நாள் வருமானம் கூட குறைவாக வரக்கூடிய கோவில்களுக்கு வரி போடப்படுகிறது. இந்த கோவில்களுக்கு அதிக வருமானம் வரக்கூடிய கோவிலில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறுகின்றனர். இதை செய்ய இவர்கள் யார்? நிறைய பிரச்னைகள் உள்ளன; வழக்கு போட்டுக் கொண்டே இருப்போம். தமிழகத்தில் கோவில்கள் சம்பந்தமாக எழும் போது, பிரச்னைகளுக்கு அனைவரும் ஒன்றாக நின்று போராட வேண்டும். இதற்காக முயற்சி எடுத்து வருகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar