காரைக்கால் தங்கமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2024 06:04
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்கால் மாவட்டம் தலத்தெரு பகுதியில் உள்ள தங்கமாரியம்மன் கோவிலில் கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். முன்னதாக முலவர் தங்க மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் தீமிதி திருவிழாவை முன்னிட்டு தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமாக பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் வான வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர் திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.